உள்ளூர் செய்திகள்
- சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்
கரூர் :
கரூர் வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பில் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள நந்திபகவானுக்கு பிரதோஷத்தையொட்டி பால், பழம், விபூதி, சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தினர். இதேபோல், தோட்டக்குறிச்சி சொக்கநாதர், மண்மங்கலம் மணிகண்டேஸ்வரர்,நன்னீர் சவுந்திரநாயகி உள்பட பல்வேறு சிவன்கோவில்களில் உள்ள நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.