உள்ளூர் செய்திகள் (District)

நெட்பால் அணிக்கு கரூர் அரசு கல்லூரி மாணவர்கள் தேர்வு

Published On 2022-12-02 09:07 GMT   |   Update On 2022-12-02 09:07 GMT
  • நெட்பால் அணிக்கு கரூர் அரசு கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
  • முதல்வர், பேராசிரியர்கள் பாராட்டினர்

கரூர்:

தமிழ்நாடு நெட்பால் அணிக்கு கரூர் அரசு கல்லுாரி மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு நெட்பால் சங்கம் சார்பில், தமிழ்நாடு அணிக்கான சீனியர் வீரர், வீராங்கனையை தேர்வு செய்வதற்கான போட்டி திருச்சியில் நடந்தது. இதில் கரூர் அரசு கலை கல்லுாரி மாணவி சினேகா, மாணவர் விக்னேஸ்வரன் ஆகியோர் தமிழ் நாடு நெட்பால் அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து தேர்வு பெற்ற மாணவ, மாணவியரை கல்லுாரி முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன், அனைத்துத் துறை பேராசிரியர்கள் பாராட்டினர்.

 

Tags:    

Similar News