உள்ளூர் செய்திகள் (District)

டூவீலர் மீது பஸ் மோதி பள்ளி மாணவன் பலி

Published On 2023-02-16 09:24 GMT   |   Update On 2023-02-16 09:24 GMT
அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கரூர்:

அரவக்குறிச்சி ஆர்.எல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி மகன் மோகன்ராஜ். இவர் அரவக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் மோகன்ராஜ் ஹோண்டா ஷைன் டூவீலரில் அரவக்குறிச்சி அருகே தலையாரிப்பட்டி பிரிவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் பஸ் டூவீலர் மீது மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே மோகன்ராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து கருப்புசாமி கொடுத்த புகாரின் படி அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News