உள்ளூர் செய்திகள் (District)
ஆற்றில் குளித்தபோது தடுமாறி விழுந்த சிவனடியார் பலி
- தடுமாறி ஆற்றில் விழுந்தவர் பலியானார்
- லாலாப்பேட்டை போலீசார் விசாரணை
கரூர்,
கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் குளித்த போது, தடுமாறி விழுந்த சிவனடியார் உயிரிழந்தார்.வேலுார் மாவட்டம், காட்பாடி வட்டம், சின்னவெண்ணமலை, சன்னதி தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 72). சிவனடியாரான இவர், நேற்று மாலை, கரூர் மாவட்டம், லாலாப் பேட்டை காவிரி ஆற்றில் குளித்து விட்டு கரை ஏற முயன்றார்.அப்போது எதிர்பாராதவிதமாக, தடுமாறி ஆற்றில் விழுந்தார். அங்கி ருந்தவர்கள், சென்று பார்த்தபோது, கோவிந்தன் உயிரிழந்தது தெரியவந் தது. லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.