உள்ளூர் செய்திகள்

சிறுவன் திடீர் சாவு

Published On 2023-05-08 06:51 GMT   |   Update On 2023-05-08 06:51 GMT
  • சிறுவன் திடீர் பரிதாபமாக இறந்தான்
  • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்:

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அட்லாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் குமார். இவரது மகன் பிரணவ்யோசின் (வயது 8). இவன் முசிறி அருகே திருஈங்கோய்மலை பகுதியில் உள்ள மடத்துப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுமுறை என்பதால் குளித்தலை அருகே உள்ள மேல ஆரியம்பட்டியில் வசிக்கும் தனது பாட்டி அமிர்தம் வீட்டில் இருந்து வந்துள்ளான். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென இச்சிறுவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.இதையடுத்து உறவினர்கள் சிறுவனை பெட்டவாய்த்தலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் நேற்று அதிகாலை இச்சிறுவன் மூச்சுவிட சிரமப்பட்டுள்ளான். இதையடுத்து உடனடியாக அச்சிறுவனை அவரது உறவினர்கள் பெட்டவாய்த்தலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு அச்சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் பிரணவ்யோசின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆனந்த் குமார் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News