உள்ளூர் செய்திகள் (District)

குளியல் அறையில் தவறி விழுந்தவர் சாவு

Published On 2022-09-21 06:11 GMT   |   Update On 2022-09-21 09:27 GMT
  • குளியல் அறையில் தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
  • சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

கரூர்:

கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம், அண்ணாநகரை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 52). இவர் சம்பவத்தன்று வீட்டில் உள்ள குளியல் அறையில் தவறி விழுந்தார். அவரது சத்தம் கேட்ட, குடும்பத்தினர் ஓடிச்சென்று, ரங்க சாமியை மீட்டு, திருச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரங்கசாமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News