- சரக்கு வாகனம் மோதி விபத்து
- மகளை சந்தித்து விட்டு வீடு திரும்பியபோது ஏற்பட்ட பரிதாபம்
கரூர்,
கிருஷ்ணராயபுரம் அடுத்த சாலைப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 53). கூலி தொழிலாளியான இவர், தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் தனது மகள் திவ்யா வீட்டுக்கு வந்துள்ளார்.பின்னர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மாயனூர் அருகே வந்த போது கரூர் நோக்கி சென்ற சரக்கு வாகனம். இவர் மீது மோதியது.இதில் கிருஷ்ணமூர்த்திக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கிருஷ்ண மூர்த்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகள் திவ்யா கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.