உள்ளூர் செய்திகள் (District)

பைக் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலி

Published On 2023-02-20 09:29 GMT   |   Update On 2023-02-20 09:29 GMT
மாயனூர் போலீசார் விசாரணை

கரூர், 

மாயனூரை அடுத்த, மேட்டுத்திருக்காம்புலியூரை சேர்ந்தவர் சின்னப்பதாஸ் (வயது 41). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு தனது பைக்கில் திரும்பி கொண்டிருந்தார். திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக, திருக்காம்புலியூரில் நின்று கொண்டிருந்தார். அப்போது, திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்த ஷிப்ட் கார், சின்னப்பதாஸ் பைக் மீது மோதியது. khஇதில் படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சின்னப்பதாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி கமலவேணி கொடுத்த புகாரின்படி, கார் டிரைவரான, ஈரோடு மாவட்டம், சித்தோடு, நல்லகவு ண்டம்பாளையத்தை சேர்ந்த மகேஷிடம் மாயனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News