உள்ளூர் செய்திகள் (District)
- யோகா பயிற்சி விழிப்புணர்வு முகாம் நடந்தது
- பெண்கள் கலந்து கொண்டனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், நொய்யல், ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.இதில், ஹோமியோபதி டாக்டர் சாந்தி தலைமையில், சுகாதார செவிலியர் சரஸ்வதி, தன்னார்வலர் ஈஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர், பெண்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு, யோகா பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், நொய்யல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.