உள்ளூர் செய்திகள் (District)

கரூர் அருகே பைக் திருடிய வாலிபர் கைது

Published On 2023-05-21 05:50 GMT   |   Update On 2023-05-21 05:50 GMT
  • கரூர் அருகே பைக் திருடிய வாலிபர் கைது செய்யபட்டார்
  • ஆண்டிவேல் போலீசில் புகார் செய்தார்

கரூர்,

கரூர் அருகே ராமானுாரை சேர்ந்தவர் ஆண்டிவேல் (வயது 52). எலக்ட்ரீஷியனான இவர் கரூர் வடக்கு நரசிம்மபுரம் பகுதியில் உள்ள எலக்ட்ரீக்கடை முன்பு பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. அதிர்ச்சியடைந்த ஆண்டிவேல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து பைக்கை திருடியதாக திண்டுக்கல் மாவட்டம், அப்னாம்பேட்டை பகுதியை சேர்ந்த சரவணகுமார் (31) என்பவரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News