உள்ளூர் செய்திகள்

ஆர்பாட்டம் நடந்த போது எடுத்தபடம்.

காவேரிப்பட்டினத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-17 09:40 GMT   |   Update On 2022-12-17 09:40 GMT
  • அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • ஒன்றிய செயலாளர் பையூர் ரவி தலைமை தாங்கினார்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பையூர் ரவி தலைமை தாங்கினார். நகர செயலாளர் விமல், மாவட்ட பால்வளத் தலைவர் குப்புசாமி, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பி.டி.சுந்தரேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா கேசவன், மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் சமரசம், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் வாசுதேவன், ஒன்றிய அவை தலைவர் சுந்தர், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் மதிவாணன், சண்முகம், பெரியசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News