உள்ளூர் செய்திகள்

பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பேச்சுவார்த்தை கூட்டம்

Published On 2023-07-14 10:07 GMT   |   Update On 2023-07-14 10:07 GMT
  • அரசாணை வெளியிட்ட பின் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தொடங்க வேண்டும்.
  • ஆழ்துளை கிணறுகள் அமையவிருக்கும் பகுதியில் கதவணை அமைக்க வேண்டும்.

பாபநாசம்:

பாபநாசம் தாலுகாவில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை தாங்கினார்.

கல்யாணசுந்தரம் எம்.பி., பாபநாசம் தாசில்தார் பூங்கொடி , கூட்டு குடிநீர் திட்ட நிர்வாகப் பொறியாளர் ஜெயக்குமார், உதவி நில நீர் வல்லுநர் லெட்சுமணன், ஒன்றியகுழு தலைவர்கள் கலைச்செ ல்வன், சுமதி .கண்ணதாசன் , மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், சுதா, கூத்தரசன், அமானு ல்லா ஆகியோர் முன்னிலை ,வகித்தனர்.இந்த கூட்டத்தில், கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தொடங்குவதற்கு முன்னர் நிலத்தடி நீரை தக்க வைக்கும் பொருட்டு ஆழ்துளை கிணறுகள் அமையவிருக்கும் பகுதியில் கதவணை அமைக்க அரசை கேட்டுக் கொண்டு அறிவிப்பு வெளியிட்ட பின்னர் பணிகளை தொடங்குவதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டோம்.

அரசு சார்பில் வாழ்க்கை - தூத்துர் இடையே கொள்ளிடத்தில் கதவணை கட்ட அறிவிப்பு வழங்கி அரசாணை வெளியிட்ட பின் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை தொடங்க வேண்டும் என்று விவசாயப் பிரதிநிதிகள், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News