உள்ளூர் செய்திகள்

வெள்ளம் புகுந்த நிலை இருக்கும் குடிசை.

கொள்ளிடம் ஆற்றில் 6-வது முறையாக வெள்ளப்பெருக்கு : கிராமங்களை மீண்டும் தண்ணீர் சூழ்ந்தது

Published On 2022-10-23 06:58 GMT   |   Update On 2022-10-23 06:59 GMT
  • 6-வது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்.
  • திட்டு உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை:

கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து 6-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்கள் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் தற்போது அணைக்கரையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அதிகரித்து வருவதால் நேற்று மாலையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.

கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராமங்களான மேலவாடி, பாலுரான் படுகை, கொன்னக்காட்டு படுகை, நாதல்படுகை, முதலை மேடுதிட்டு, வெள்ளமணல், கோரை திட்டு உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தங்கள் வீடுகளை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

தொடர்ந்து கொள்ளிடம் ஆற்று தண்ணீர் கிராமங்களை சூழ்ந்து வருவதால் அரசு முகாமிற்கு செல்லும் நிலையில் அப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர்.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிக அளவில் தண்ணீர் சென்று பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் கலந்து வருகிறது.

கடல் சீற்றம் காரணமாக கடந்த 10 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை பழையாறு துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News