உள்ளூர் செய்திகள்

மதுபோதையில் தென்பெண்ணை ஆற்றில் குளித்த கூலி தொழிலாளி சாவு

Published On 2023-08-04 10:01 GMT   |   Update On 2023-08-04 10:01 GMT
  • மதுபோதையில் அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்தார்.
  • அப்போது நீரில் முழ்கி அவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்து உள்ள தியாகரசன பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. கூலி தொழிலாளியான இவர் நேற்று மதுபோதையில் அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளித்தார்.

அப்போது நீரில் முழ்கி அவர் உயிரிழந்தார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News