உள்ளூர் செய்திகள்

முகாமில் நீதிபதி சுனில்ராஜா பேசியபோது எடுத்தபடம்.

செங்கோட்டை நீதிமன்றத்தில் வாகன ஓட்டிகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம்

Published On 2023-02-10 09:38 GMT   |   Update On 2023-02-10 09:38 GMT
  • செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடந்தது.
  • வாகன ஓட்டிகளுக்கு சட்டம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து நீதிபதி சுனில்ராஜா விளக்கி பேசினார்.

செங்கோட்டை:

செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடந்தது. முகாமிற்கு வட்ட சட்டப்பபணிகள் குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவரும் நீதிபதியுமான சுனில்ராஜா தலைமை தாங்கினார். வக்கீல் சங்க துணைத்தலை வா் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தார். வட்டசட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். அதனை தொடா்ந்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அபாரதம் செலுத்த வந்த வாகன ஓட்டிகளுக்கு சட்டம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து நீதிபதி சுனில்ராஜா, விளக்கி பேசினார்.

நிகழ்ச்சியில் வக்கீல்கள் சக்திவேல், வெங்கடேஷ், ஜெயகணேஷ், சிதம்பரம், சாமி, ஆசாத், நித்யானந்தன். பைரவன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் மூத்த வக்கீல் பழனிக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News