உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி மாவட்டத்தில் மது, போதை பாக்குகள் விற்றவர்கள் கைது

Published On 2022-10-02 04:31 GMT   |   Update On 2022-10-02 04:31 GMT
  • தேனி மாவட்டம் பல்வேறு பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
  • மதுபாட்டில் மற்றும் போதை பாக்குகள் விற்றவர்களை கைது செய்து அதனை பறிமுதல் செய்தனர்.

தேனி:

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை டாஸ்மாக் கடை அருகே கடமலைக்குண்டு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மதுவிற்ற செல்வம்(42) என்பவரை கைது செய்து 24 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பழனிசெட்டிபட்டி போலீசார் முல்லைநகர் பகுதியில் ரோந்து சென்றபோது புகையிலை, போதை பாக்கு விற்ற முனியம்மாள்(42) என்பவரை கைது செய்தனர். மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்றபோது பூதிப்புரம் பெட்டிக்கடையில் மதுவிற்ற பொன்னாங்கன்(56) என்பவரை கைது செய்து 11 மதுபாட்டில்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

கண்டமனூர் போலீசார் டி.மீனாட்சிபுரம் மேற்குதெரு பகுதியில் ரோந்து சென்றபோது மாயழகன்(51) என்பவரை கைது செய்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கூடலூர் வடக்கு போலீசார் ரோந்து சென்றபோது கே.எம்.பட்டி விளக்கு அருகே மதுவிற்ற பரமசிவம்(52) என்பவரை கைது செய்து 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

போடி நகர் போலீசார் தேவர் காலனியில் ரோந்து சென்றபோது மதுவிற்ற நாகராஜ்(48) என்பவரை கைது செய்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ராயப்பன்பட்டி போலீசார் ேராந்து சென்றபோது சின்னஓவுலாபுரம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே மதுவிற்ற முருகன்(51) என்பவரை கைது செய்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News