உள்ளூர் செய்திகள்

மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.

மகளிர் குழுக்களுக்கு கடனுதவி

Published On 2023-04-08 09:32 GMT   |   Update On 2023-04-08 09:32 GMT
  • ஜி-20 உச்சிமாநாடு விழிப்புணர்வு என முப்பெரும் விழா நடைபெற்றது.
  • 22 கிராமங்களை சேர்ந்த 35 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 2.75 கோடி கடனுதவி.

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கருப்பூர் கவ்டெசி தொண்டு நிறுவன த்தில் டாக்டர் அம்பேத்கரின் 132 -ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா ஜி20 உச்சிமாநாடு விழிப்புணர்வு என முப்பெரும் விழா நடைபெற்றது.

வருகை தந்த அனைவரையும் கவ்டெசி தொண்டு நிறுவன தலைவர் மாவடியான் வரவேற்றார்.மதுரை பேராசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கி தஞ்சாவூர், கரந்தை, திருச்சென்னம்பூண்டி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, மைக்கேல்பட்டி, மாத்தூர் உள்ளிட்ட 22- கிராமங்களைச் சார்ந்த 35 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ2.75 கோடி வங்கி மதிப்பிலான கடனு தவிகளை வழங்கி பேசினார்.

விழாவில் பூண்டி வெங்கடேசன், பூதலூர், தங்க.கென்னடி, திருப்பூந்துருத்தி சிவக்குமார், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

விழா நிகழ்ச்சியை கவ்டெசி நிறுவன செயலாளர் கருணாமூர்த்தி தொகுத்து வழங்கினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கவ்டெசி நிறுவன பணியாளர்கள் கோமதி, சுபாஷினி, கனேஷ்வரி, ஆர்த்தி, ரூபன் ஆகியோர் செய்திருந்தனர்.

விழா நிறைவில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News