உள்ளூர் செய்திகள்

2 பேர் தற்கொலை

Published On 2022-07-18 09:34 GMT   |   Update On 2022-07-18 09:34 GMT
  • 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுரை

மதுரை எஸ்.கொடிக்குளம், பிள்ளையார் கோவில் தெரு, பாரதிநகரை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 42). இவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. இதன் காரணமாக அவருக்கு கால்களில் புண் ஏற்பட்டது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே கால்கள் அழுகிவிட்டன. இதனால் அவரது 2 கால்களையும் மருத்துவர்கள் அகற்றி விட்டனர். இது அவரது மனதை வேதனப்படுத்தியதால் விஷ்ணு, நேற்று மதியம் வீட்டில் விஷம் குடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம், மீனாம்பிகை நகரை சேர்ந்தவர் ராஜூ (56). இவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ராஜு நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News