உள்ளூர் செய்திகள் (District)

அடையாளம் தெரியாத 3 சடலங்கள் மீட்பு

Published On 2022-11-28 05:44 GMT   |   Update On 2022-11-28 05:44 GMT
  • மதுரையில் அடையாளம் தெரியாத 3 சடலங்கள் மீட்கப்பட்டது.
  • யார் அவர்கள்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை பெருங்குடி பஸ் நிறுத்தத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடப்பதாக அவனியாபுரம் போலீசுக்கு தகவல் வந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை காந்தி மியூசியம் ராஜாஜி பூங்கா அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் கிடப்பதாக, கிராம நிர்வாக அதிகாரி முனியசாமி கொடுத்த புகாரின் பேரில், தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை தத்தனேரி கே.வி. சாலை, அ.தி.மு.க. அலுவலகம் முன்பு 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து விளாங்குடி கிராம நிர்வாக அதிகாரி நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News