உள்ளூர் செய்திகள்

கைதான வேல்முருகன், மணிகண்டன் ஆகிேயாருடன் போலீசார் உள்ளனர.

மதுரை வந்த ரெயிலில் 35 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது

Published On 2022-09-19 09:22 GMT   |   Update On 2022-09-19 09:22 GMT
  • மதுரை வந்த ரெயிலில் 35 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியதில் 2 பேரை கைது செய்தனர்.
  • பெங்களூரு- நாகர்கோவில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயிலில் சோதனை நடத்தப்பட்டது.

மதுரை

மதுரை ரெயில் நிலையத்துக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, ரெயில்வே போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார், நேற்று இரவு மதுரை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சோதனை நடத்தினர்.

பெங்களூரு- நாகர்கோவில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயிலில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு 2 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 35

கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து புகையிலை பொருட்களை ரெயிலில் கடத்திய நெல்லை பாளையங்கோட்டை, நயினார் தெருவை சேர்ந்த வேல்முருகன், மணிகண்டன் (வயது 32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News