உள்ளூர் செய்திகள்

ரூ.7 லட்சம்-10 பவுன் நகைகள் கேட்டு புதுப்பெண் சித்ரவதை

Published On 2023-03-03 08:24 GMT   |   Update On 2023-03-03 08:24 GMT
  • மதுரை அருகே ரூ.7 லட்சம், 10 பவுன் நகைகள் கேட்டு புதுப்பெண்ணை சித்ரவதை செய்துள்ளனர்.
  • கடந்த மாதம் 10-ந்தேதி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நாகேஸ்வரி புகார் செய்தார்.

திருமங்கலம்

திருமங்கலம் கற்பகநகரை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகள் நாகேஸ்வரி(வயது23). இவருக்கும் திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜவேலு என்பவர் மகன் உதயசங்கர்(28) என்பவருக்கும் கடந்த 10-6-2022 அன்று திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது வரதட்சணையாக 30 பவுன் நகைகள், ரூ. 50ஆயிரம் ரொக்கப்பணம், ரூ.3லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை நாகேசு வரியின் குடும்பத்தினர் வழங்கி யுள்ளனர். இந்த நிலையில் 25-7-2022 அன்று மேலும் 10 பவுன் நகைகள், ரூ.7 லட்சம் ரொக்கப்பணம் வாங்கி வருமாறு வற்புறுத்தி உதயசங்கர் தனது மனைவியை சித்ரவதை செய்துள்ளார்.

உதயசங்கருக்கு ஆதர வாக அவரது தந்தை ராஜவேலு, தாய் மீனா, அண்ணன் ரகு ஆகியோர் செயல்பட்டுள்ளனர். இதுபற்றி கடந்த மாதம் 10-ந்தேதி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நாகேஸ்வரி புகார் செய்தார். அதன் பேரில் உதயசங்கர், அவரது தந்தை ராஜவேலு, தாய் மீனா, அண்ணன் ரகு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதயசங்கர் பட்டதாரி என்றாலும் வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தந்தை ராஜவேலு ராணுவ வீரராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். தாய் மீனா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News