உள்ளூர் செய்திகள்

வாலிபர்- பெண்ணிடம் செல்போன்கள் பறிப்பு

Published On 2023-04-18 08:52 GMT   |   Update On 2023-04-18 08:52 GMT
  • வாலிபர்- பெண்ணிடம் செல்போன்கள் பறிக்கப்பட்டது.
  • திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

திருப்பரங்குன்றம் சந்திராலயம் முதல் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது36). இவரது உறவினர் கணேசன். இவர் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி ரோட்டில் சென்று கொண்டி ருந்தார்.

அப்போது 2 வாலிபர்கள் அவரை வழிமறித்து தாக்கினர் .இதில் கணேசன் மயங்கி விழுந்தார். அவரிடம் இருந்த செல்போனையும் ரூ.600-யும் வாலிபர்கள் பறித்து தப்பினர்.

இது குறித்து கணேசனின் உறவினர் சுரேஷ் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருப்பரங்குன்றம் படப்பட்டி தெருவை சேர்ந்த இளையராஜா (43), தனக்கன்குளம் கிழக்குபகுதி ஈஸ்வரன் (45) ஆகியோரை கைது செய்தனர்.

மதுரை உலகநேரி மிருதுஞ்ஜெயன் மனைவி சித்ராதேவி (30). இவர் நேற்று மாலை அண்ணா பூங்காவில் நடை பயிற்சி சென்றார். அவரை மோட்டார் சைக்கிளில் வந்தவர் பின் தொடர்ந்தார்.

பின்னர் அவர் சித்ரா தேவியின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினார். இது குறித்த புகாரின்பேரில் திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News