உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் பிறந்தநாள்: 30-ந்தேதி ஜல்லிக்கட்டு

Published On 2023-04-24 08:23 GMT   |   Update On 2023-04-24 08:23 GMT
  • முதல்-அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு எம்.சத்திரப்பட்டியில் 30-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும்.
  • அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

மதுரை

அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியாக பல்வேறு இடங்களில் மாட்டுவண்டி பந்தயம், விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட எம்.சத்திரப்பட்டியில் வருகிற 30-ந்தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

இந்த போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் நாளை (25-ந்தேதி) சத்திரப்பட்டி வாடிவாசல் முன்பு நடைபெறும் முன்பதிவில் பங்கேற்கலாம்.

மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கின்றன. இதில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News