உள்ளூர் செய்திகள்
எஸ்.என்.கல்லூரியில் கல்லூரி தின விழா
- எஸ்.என்.கல்லூரியில் கல்லூரி தின விழா நடந்தது.
- சுயநிதிப்பிரிவு இயக்குநர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.
மதுரை
மதுரை சரசுவதி நாரா யணன் கல்லூரியின் 57வது கல்லூரி தினவிழா கல்லூரி செயலர் நாரா யணன் தலைமையில் நடை பெற்றது. துணை முதல்வர் மோதிலால் வரவேற்று பேசினார்.
முதல்வர் கண்ணன் தொடக்கவுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழக, கல்லூரி வளர்ச்சிக்குழு டீன் கண்ணதாசன் பேசுகை யில், மாணவர்கள் தனித்திற மைைய வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் பல்கலைக்கழகம் அளிக்கும் பட்டங்களும், மதிப்பெண் பட்டியலும் ஒரு சிறந்த வேலை வாய்ப்பை உரு வாக்க முடியாது என்று கூறினார்.
பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது. சுயநிதிப்பிரிவு இயக்குநர் ஜெயக்கொடி நன்றி கூறி னார்.