உள்ளூர் செய்திகள்

 சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகளை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகள்

Published On 2022-11-15 09:21 GMT   |   Update On 2022-11-15 09:21 GMT
  • கீழக்கரையில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகளை எம்.எல்.ஏ. வழங்கினார்.
  • 5-வது வார்டு முத்துசாமிபுரத்தில் உள்ள குடிநீர் குழாய்களை பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

கீழக்கரை

தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சாலையோர வியாபாரி களுக்கான ஆதரவு திட்டத்தின் கீழ் கீழக்கரையில் உள்ள சாலையோர வியாபா ரிகளுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள தள்ளுவண்டிகள் வழங்க 15 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. முதற்கட்டமாக 5 தள்ளு வண்டிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து புதிய ஜெட்டி பாலத்தில் அமைந்துள்ள உயர் கோபுர மின் விளக்கை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். 1-வது மற்றும் 7-வது வார்டுகளில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காக்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்தார். 5-வது வார்டு முத்துசாமிபுரத்தில் உள்ள குடிநீர் குழாய்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

மேலும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சம் மதிப்பில் அமைய உள்ள சமுதாயக் கூட இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணைத்தலைவர் ஹமீது சுல்தான், ஆணையாளர் செல்வராஜ், பொறியாளர் அருண், ராமநாதபுரம் நகராட்சி துணைத் தலைவர் பிரவீன் தங்கம், கீழக்கரை நகர் தி.மு.க. செயலாளர் பஷீர் அகமது, மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன், வடக்கு தெரு ஜமாஅத் தலைவர் ரத்தின முஹம்மது, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சுபியான், நயீம் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News