உள்ளூர் செய்திகள்
- கருப்பட்டி, அம்மச்சியாபுரத்தில் காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விழா நடந்தது.
- வரதராஜ பண்டிட்ஜி தலைமையில் யாகசாலை தொடங்கியது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி, அம்மச்சியாபுரத்தில் காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விழா நடந்தது. வரதராஜ பண்டிட்ஜி தலைமையில் யாகசாலை தொடங்கியது. செல்லப்ப சர்மா பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் முதல் கால பூஜை நடத்தினர். நேற்று காலை 7.45 மணியளவில் மஹா பூர்ணாகுதி பூஜை செய்து கடம் புறப்பாடானது. பாராயணம் படித்து வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
கிராம பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து அம்மனை வணங்கினர், அம்மச்சியாபுரம் கிராம மக்கள், விழா கமிட்டியினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.