உள்ளூர் செய்திகள்

மக்கள் நல சங்கம் ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-29 08:40 GMT   |   Update On 2023-05-29 08:40 GMT
  • மக்கள் நல சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றம் செய்ய வேண்டும்.

மதுரை

தேவேந்திரர் மக்கள் நல சங்கம் சார்பில் தேவேந்திரன் தலைமையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றம் செய்ய வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் இட பங்கீடு வழங்கிட வேண்டும். வன்னியர்களுக்கான 10.5சதவீத இட ஒதுக்கீடு ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் நடராஜன், பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா, முன்னாள் கவுன்சிலர் வீரகுமார், பூமிநாதன் யாதவ், .பா.ஜ.க. சிவாஜி, கிங்சுந்தரம், வழக்கறிஞர் சரவணபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News