உள்ளூர் செய்திகள் (District)
- மதுரையில் நாளை மின்தடை ஏற்படும்.
- இதன் காரணமாக நாளை (30-ந் தேதி) காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மதுரை
மதுரை அண்ணாநகர் பிரிவுப்பகுதியில் உயரழுத்த மின்பாதைகளில், புதைவடம் (கேபிள்) இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக நாளை (30-ந் தேதி) காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை அண்ணாநகர் கிழக்கு, குருவிக்காரன் சாலை, எஸ்.எம்.பி. காலனி, காமராஜர் தெரு, ஆலமரம் பஸ் நிறுத்தம், முதலியார் காலனி, ஜக்கா தோப்பு, அரவிந்த் மருத்துவமனை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.