உள்ளூர் செய்திகள் (District)

புரட்டாசி பொங்கல் திருவிழா

Published On 2022-10-06 07:47 GMT   |   Update On 2022-10-06 07:47 GMT
  • மேலக்கால் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
  • வருகிற 11-ந் தேதி வைகை ஆற்றில் கரகம் எடுக்கச் செல்லுதல் மற்றும் இரவு முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.

சோழவந்தான்

மதுரை மாவட்டம், சோழ வந்தான் அருகே மேலக் கால் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திரு விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.காப்பு கட்டுதல் நிகழ்ச்சியில், ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். திருவிழாவில், முக்கிய திருவிழாவான வரும் 11-ந் தேதி செவ்வாய்க்கிழமை வைகை ஆற்றில் கரகம் எடுக்கச் செல்லுதல் மற்றும் இரவு முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. 12-ந் தேதி (புதன்கிழமை) காலை அம்மனுக்கு கோயில் வாசலில் பொங்கல் வைத்தல் இரவு மாவிளக்கு எடுத்து ஊர்வலம் வருதல், 13-ந் வியாழக்கிழமை முளைப் பாரி எடுத்துச் சென்று வைகை ஆற்றில்கரைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை, மேலக்கால் கிராம பொதுமக்கள் கிராம கமிட்டியாளர்கள் மற்றும் முதன்மை காரர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News