ரெயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
- ரெயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- முடிவில் கோட்ட துணைத்தலைவர் வினோத் பாபு நன்றி கூறினார்.
மதுரை
மதுரை கோட்ட ரெயில்வே தொழிலாளர் சங்கமான தக்சின் ரெயில்வே ஊழியர்கள் யூனியன் சார்பில் மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவுவாயில் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. துணை பொதுச்செயலாளர் கார்த்திக் சங்கிலி தலைமை தாங்கி னார்.
கோட்ட பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தார். துணை பொதுச்செயலாளர் சிவக்குமார், கோட்ட உதவி தலைவர் ஜெயராஜசேகர், கோட்ட இணை செயலாளர்ஆர்.சங்கரநாராயணன், ஏ.ஐ.எல்.ஆர்.எஸ்.ஏ. கோட்ட துணை தலைவர் கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
100 ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்த ராயபுரம் ரெயில்வே அச்சகத்தை மூடும் முடிவை கைவிட வேண்டும். காலி பணி யிடங்கள் போர்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். முன்னாள் ராணுவத்தினரை ஒப்பந்த கேட் கீப்பர்களாக நியமிக்கக் கூடாது. தொழிலாளர்க ளுக்கு அலவன்ஸ் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
முடிவில் கோட்ட துணை தலைவர் வினோத் பாபு நன்றி கூறினார்.