உள்ளூர் செய்திகள் (District)
விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி சாவு
- விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை குருவிக்காரன் ரோடு வைகை தென்கரை ரோடு ரவுண்டானா அருகே சம்பவத்தன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 45 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தெப்பக்குளம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் இறந்தவர் பெயர் வெங்கடேசன் என தெரியவந்துள்ளது. மற்ற விபரங்கள் தெரியவில்லை.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.