உள்ளூர் செய்திகள்
- மதுரை அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
- கத்தியை காட்டி மிரட்டி ரூ.3,450-ஐ பறித்துச் சென்றார்.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் சேதுபதி தெருவை சேர்ந்தவர் வீரபாண்டி (வயது 28). இவர் நேற்று ராமையா தெருவில் உள்ள டீக்கடைக்குச் சென்றார்.
அப்போது இதே பகுதியில் வசிக்கும் சங்கரபாண்டி என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3,450-ஐ பறித்துச் சென்றார்.
இதுகுறித்து வீரபாண்டி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரபாண்டியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.