உள்ளூர் செய்திகள்
- வாடிப்பட்டி கோர்ட்டில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
- உலகசுற்று சூழல்தின விழாவையொட்டி மரக்கன்று நடப்பட்டது.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் உலகசுற்று சூழல்தின
விழாவையொட்டி மரக்கன்று நடப்பட்டது. இதில் நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன், வெங்கலட்சுமி ஆகியோர் வேம்பு, புங்கை மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி, வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் முத்துராமலிங்கம், கோகுல்நாத், ராஜாஜி, விஜயக்குமார், வெள்ளைசாமி, முத்துமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தலைமைஎழுத்தர் கணேசன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வட்டசட்டபணிகள்குழு சட்ட தன்னார்வலர்கள் சண்முகவள்ளி, பாலமுருகன், அயல்அரசன், வனிதா, பொன்னையா ஆகியோர் செய்திருந்தனர்.