உள்ளூர் செய்திகள் (District)

இளைஞர் திறன் மேம்பாட்டு முகாம்

Published On 2022-10-09 07:53 GMT   |   Update On 2022-10-09 07:54 GMT
  • அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இளைஞர் திறன் மேம்பாட்டு முகாம் நடந்தது.
  • வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், உதவி திட்ட அலுவலர்கள் மரியா, வெள்ளபாண்டி, காளிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா நடந்தது. மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் காளிதாசன் தலைமை தாங்கினார்.

ஊரகவளர்ச்சி துறையின் கூடுதல் இயக்குநர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், உதவி திட்ட அலுவலர்கள் மரியா, வெள்ளபாண்டி, காளிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்களான கல்வி அறக்கட்டளை, பெட்கிராட், ரூட்செட் உள்பட 12 நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இதில் அலங்காநல்லூர் வட்டாரத்தை சேர்ந்த 270-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு திறன்பயிற்சி சேர்க்கைக்கான சான்றிதழும், பயிற்சிக்கான உபகரணங்களும் பெற்றுக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மேலாளர் மகாலட்சுமி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர். உதவிதிட்ட அலுவலர் சின்னத்துரை நன்றி கூறினார்.

Tags:    

Similar News