உள்ளூர் செய்திகள் (District)

உறுப்பினர் சேர்க்கை: இன்று முதல் 27-ந்தேதி வரை எச்.ராஜா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்

Published On 2024-09-25 09:25 GMT   |   Update On 2024-09-25 09:25 GMT
  • 65 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
  • சுற்றுப்பயணம் செங்கல்பட்டில் நேற்று தொடங்கியது.

சென்னை:

பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா மாவட்டம் வாரியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலக செயலாளர் எம்.சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா, தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வின் அமைப்புரீதியான 65 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி அவரது சுற்றுப்பயணம் செங்கல்பட்டில் நேற்று தொடங்கியது.

இன்று அவர் தென் சென்னை, சென்னை கிழக்கு, மத்திய சென்னை கிழக்கு ஆகிய மாவட்டங்களில் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார். நாளை (26-ந்தேதி) காஞ்சீபுரம், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, சென்னை மேற்கு ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்.

வருகிற 27-ந்தேதி மத்திய சென்னை மேற்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை மேற்கு ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்.

அதைத்தொடர்ந்து அவர் திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு பணிகளில் ஈடுபடுகிறார்.

அக்டோபர் 17-ந்தேதி நீலகிரியில் அவர் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார். இந்த சுற்றுப்ப யணத்தின் ஒருங்கிணைப்பாளராக கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News