உள்ளூர் செய்திகள்

மேட்டூர் நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காட்சி.

சம்பளம் வழங்காததை கண்டித்து மேட்டூர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்

Published On 2022-10-17 09:41 GMT   |   Update On 2022-10-17 09:41 GMT
  • மேட்டூர் நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளத் தொகை இன்று வரை வழங்கப்படவில்லை என தெரிகிறது.
  • இதையடுத்து நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மேட்டூர்:

மேட்டூர் நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளத் தொகை இன்று வரை வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மேட்டூர் பஸ் நிலையம் பகுதியில் அமர்ந்து வேலை புறக்கணிப்பை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் நகரின் பல்வேறு இடங்களிலும் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளது.

குறிப்பாக, கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வருவதால் மழை நீரில் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே சாலைகளில் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு குள்ளாகி உள்ளனர்.

Tags:    

Similar News