உள்ளூர் செய்திகள் (District)

தூத்துக்குடி 45-வது வார்டு பகுதியை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்ட போது எடுத்தபடம்.

தூத்துக்குடி 45-வது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர் கீதாஜீவன்

Published On 2023-09-16 08:55 GMT   |   Update On 2023-09-16 08:55 GMT
  • தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களின் குறைகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
  • புதியசாலை வசதி, கழிவுநீர் தேங்காதவாறு கால்வாய் வசதி அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களின் குறைகளை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக் களை பெற்று வருகிறார்.

அதன்படி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 45-வது வார்டு லெவிஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அப்பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். அப்போது புதியசாலை வசதி, கழிவுநீர் தேங்காதவாறு கால்வாய் வசதி அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

பின்னர் பொது மக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் வசதிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன். இந்த பகுதிக்கு தி.மு.க. ஆட்சி வந்த பிறகு புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. விடுபட்ட பகுதிக்கும் முழுமையாக சாலை, கால்வாய் வசதிகள் அமைத்து தரப்படும். மேலும் குடிதண்ணீர் சீரான முறையில் வழங்க ப்பட்டு வருகிறது. எந்த குறைபாடுகள் இருந்தாலும் அதை முழுமையாக செய்து தருவேன் என்று உறுதி அளித்தார்.

அப்போது, மாநகராட்சி பொறியாளர் சரவணன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செய லாளரும் கவுன்சில ருமான ராமகிருஷ்ணன், மாவட்;ட பிரதிநிதி செந்தில் குமார், வட்டச்செயலாளர் சுரேஷ், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், ரஜினிமுருகன், மற்றும் நடராஜன், மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News