தூத்துக்குடியில் கொட்டும் மழையிலும் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
- தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் தெருக்களில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
- அமைச்சர் கீதாஜீவன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் மனுவை பெற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1-ந் தேதி நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கிருஷ்ணராஜபுரம் பகுதியில் 4,5,6 ஆகிய தெருக்களில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனையடுத்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மழை பெய்தது. இருப்பினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தா மல் ஆய்வினை முழுமையாக நடத்தி பின்னர் பொது மக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.
அம்போது, பகுதி சபா கூட்டத்தில் மக்கள் வைத்த கோரிக்கையான கிருஷ்ணராஜபுரம் பகுதியில் 4, 5, 6 ஆகிய தெருக்களில் புதிய கழிவுநீர் கால்வாய் விரைவில் அமைத்து தருவதாக உறுதியளித்தார்.
ஆய்வின் போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், போல் பேட்டை பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணி கண்ணன், வட்ட செயலாளர் சக்கரைசாமி, கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்ஷ்லின், சங்கர், அசோக்குமார், கலைச் செல்வன் உள்பட பலர் உடனி ருந்தனர்.