உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
- மாதவரம் பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது.
- மோட்டார் சைக்கிள்களை திருடுவது வியாசர்பாடி பாரதிநகரை சேர்ந்த விக்ரம் என்பது தெரிய வந்தது.
மாதவரம் பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. இது தொடர்பாக மாதவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் மோட்டார் சைக்கிள்களை திருடுவது வியாசர்பாடி பாரதிநகரை சேர்ந்த விக்ரம் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருடிய மோட்டார் சைக்கிளை புதுப்பேட்டையில் விற்று விடுவதாக தெரிவித்தார்.
அவர் கொடுத்த தகவலின்படி திருட்டு மோட்டார் சைக்கிளை வாங்கிய புதுப்பேட்டையை சேர்ந்த குலா மொய்தீன், ஷேக் முகமது ஆகியோரும் சிக்கினர். கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.