உள்ளூர் செய்திகள் (District)

ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து; வாலிபர் பலி

Published On 2023-04-03 09:21 GMT   |   Update On 2023-04-03 09:21 GMT
  • சேர்மராஜ் தனது மோட்டார் சைக்கிளில் முத்துக்கிருஷ்ணபேரிக்கு சென்றார்.
  • காயமடைந்த சேர்மராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து மேலதெருவை சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மகன் சேர்மராஜ் (வயது29). கூலி தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் கல்லூத்தில் இருந்து முத்துக்கிருஷ்ணபேரிக்கு சென்றார்.

அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் பாலமுருகன் (37) என்பவர் வந்தார். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதின. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த சேர்மராஜை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பாலமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேர்மராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக வி.கே.புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News