மாணவர்களின் எதிர்காலம் கருதி வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க முக்குலத்து புலிகள் கட்சி வலியுறுத்தல்
- வன்முறையாக வெடித்து பள்ளிவாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு, பள்ளி சூறையாடப்பட்டது.
- மாணவியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிதி உதவியும், நீதியும் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
முக்கு–லத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி இண்டர்நேஷனல் பள்ளி–யில் விடுதியில் தங்கி படித்து வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி கடந்த சில தினங்களுக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க கோரியும், பள்ளியை இழுத்து மூட வலியுறுத்தியு ம்தொடர்ச்சியாக 4 நாட்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தை அமைதிப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும்எடுக்காததால் போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்து பள்ளிவாகன ங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு, பள்ளி சூறையாடப்பட்டது. காவல், தீயணைப்பு வாகனங்களும் தாக்கப்பட்டன.
இந்த சம்பவத்திற்கு பிறகும் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு அரசின் சார்பில் ஆறுதலோ, இழப்பீட்டு உதவி தொகையோ, வழங்காதது கண்டிக்கத்தக்கது.இந்த சம்பவத்தை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் வன்மு றையை தவிர்த்து இருக்க முடியும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிதி உதவியும், நீதியும் கிடைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுத்து தடை விதிக்க வேண்டும். இந்த போராட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் மீது வழக்குப்பதிவுசெய்யப் படுவதாக கூறப்படுகிறது. எனவே, போராடிய இளை ஞர்கள், மாணவர்களின் எதிர்காலம்பாதிக்க ப்படாமல் இருக்க, ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட–வர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது போல இதையும் நீக்க வேண்டும் என்று முக்குலத்துப்புலிகள் கட்சி–யின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.