உள்ளூர் செய்திகள்
கோத்தகிரி அருகே முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
பக்தர்கள் அலகு குத்தி, வேல் ஏந்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலகமாக வந்தனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-ஊட்டி செல்லும் பிரதான சாலையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு உற்சவ திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தினமும் சிறப்பு பூைஜகள் நடைபெற்றது. நேற்று பக்தர்கள் அலகு குத்தி, வேல் ஏந்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலகமாக வந்தனர்.
பின்னர் அன்னதான நிகழ்வு நடைபெற்றது அதில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.