உள்ளூர் செய்திகள்

பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி.

காதல் கணவரை திருமணம் செய்த கல்லூரி மாணவி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

Published On 2023-09-18 07:23 GMT   |   Update On 2023-09-18 07:23 GMT
  • குணசேகரன் மகன் வசந்தகுமார் (22). இவர் பள்ளி பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
  • சவுந்தர்யா (21). இவர் ஈரோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடமாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் வசந்தகுமார் (22). இவர் பள்ளி பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

திருச்செங்கோடு அருகே உள்ள ஆவாரம்பாளையம் ஆயக்காட்டை சேர்ந்தவர் சவுந்தர்யா (21). இவர் ஈரோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடமாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் காதல் ஜோடியினர் இருவரும் ஈரோடு மாவட்டம், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்களுக்கு பயந்து பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இரு தரப்பு பெற்றோர்க ளையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சவுந்தர்யா தனது காதல் கணவருடன்தான் செல்வேன் என கூறியதால் போலீசார் அவரை வசந்தகுமாருடன் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News