உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினால்பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

Published On 2023-08-01 09:00 GMT   |   Update On 2023-08-01 09:00 GMT
  • மோட்டார் வாகனச் சட்டம் 2019 சட்டப்பிரிவு 199-ஏ படி பெற்றோர்கள் பாதுகாவலர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
  • மேலும் வாகனம் 12 மாதங்களுக்கு சாலையில் ஓடுவது ரத்து செய்யப்படும்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பள்ளி மாணவ மாணவிகள் ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம் இல்லாமல் மோட்டார் வாகனம் ஓட்டினால் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் 2019 சட்டப்பிரிவு 199-ஏ படி பெற்றோர்கள் பாதுகாவலர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். மேலும் வாகனம் 12 மாதங்களுக்கு சாலையில் ஓடுவது ரத்து செய்யப்படும். வாகனம் ஓட்டிய சிறுவர்கள் 25 வயது வரை எந்த வாகன ஓட்டுநர் உரிமமும் பெற இயலாது. எனவே பெற்றோர்கள், பொதுமக்கள் இதில் கவனம் செலுத்தி தங்களது குழந்தைகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News