நாமக்கல்லில் சாலையில் சுற்றித் திரியும் நாய்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
- சாலைகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன.
- இவை சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்திச் சென்று பயமுறுத்துகின்றன.
நாமக்கல்:
நாமக்கல்லில் கோட்டை சாலை, பரமத்தி சாலை, கடைவீதி, மோகனூர் சாலை, திருச்சி சாலை, துறையூர் செல்லும் சாலைகள் உள்ளன.
தெரு நாய்கள்
இந்த சாலைகளில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இதுதவிர இலகு ரக, கனரக வாகனங்களும் சென்று வருகின்றன.
இந்நிலையில், இந்த சாலைகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்திச் சென்று பயமுறுத்துகின்றன.
மேலும், வாகனங்கள் வரும்போது, திடீரென குறுக்கே பாய்வதால் பலர் விபத்துகளில் சிக்குகின்றனர்.
இதனால் பலருக்கு கை, கால்கள் முறிவதும், சில உயி ரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அண்மையில் பரமத்தி சாலையில் இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் நாய் குறுக்கே சென்றதால் கீழே விழுந்து காயம் அடைந்தார்.
எனவே சாலையில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.