பரமத்தி வேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்
- வேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் பள்ளி சாலையில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடந்தது.
- பயிற்சி முகாமிற்கு வேலூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
பரமத்தி வேலூர்:
வேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் பள்ளி சாலையில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடந்தது. பயிற்சி முகாமிற்கு வேலூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
இந்த முகாமில் வேலூர், பரமத்தி, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை டவுன் பஞ்சாயத்துகளைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர். முகாமில் தூய்மை பணியாளர்கள் செயல்படுவது குறித்து பயிற்சி அளித்தனர்.
இதற்கு முன்னதாக வேலூர் டவுன் பஞ்சாயத்தில் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணி புரிந்து வரும் செந்தில்குமார் (45), மற்றும் 8 ஆண்டுகளாக பணிபுரியும் குப்பாயி (45)ஆகிய இருவருக்கும் மாலை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.
இந்த பயிற்சியில் பரமத்தி செயல் அலுவலர் சுப்பிரமணி, பாண்டமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் திலகராஜ், வெங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன்,எருமப்பட்டி செயல் அலுவலர் வசந்தா மற்றும் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.