உள்ளூர் செய்திகள்

நடராஜ பெருமானுக்கு அபிஷேகம்

Published On 2023-08-31 07:48 GMT   |   Update On 2023-08-31 07:48 GMT
  • நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் திருஞா னசம்பந்தர் மடாலயத்தில் நடராஜர் அபிஷேகம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது.
  • 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் திருஞா னசம்பந்தர் மடாலயத்தில் நடராஜர் அபிஷேகம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது. தேவாரம் - திருவாசகம் ஓதலுடன் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமா னுக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் ,தேன், விபூதி ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமான் பக்தர்க ளுக்கு காட்சி அளித்தார். மதியம் 1 மணிக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News