உள்ளூர் செய்திகள்

தருமபுரி அருகே டிரைவர் தற்கொலை

Published On 2022-09-16 09:35 GMT   |   Update On 2022-09-16 09:35 GMT
  • வீட்டில் யாருமில்லாத போது தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
  • இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சுரேஷ் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தருமபுரி,

தருமபுரியை அடுத்துள்ள எக்காண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று வீட்டில் யாருமில்லாத போது தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். பின்னர் வீடு திரும்பிய சுரேஷின் உறவினர்கள் அவர் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சுரேஷ் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News