உள்ளூர் செய்திகள்

குருபரப்பள்ளி அருகே லாரி டிரைவரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு 3 மர்ம நபர்கள் மீது வழக்கு

Published On 2022-08-08 09:55 GMT   |   Update On 2022-08-08 09:55 GMT
  • பணம்,செல்போன்,ஏ.டி.எம்.கார்டு முதலியவற்றை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர்.
  • குருபரப்பள்ளி போலீசார் மர்ம நபர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி போலீஸ் சரகம் குந்தாரப்பள்ளி என்ற இடத்தருகே தனியார் நிறுவன லாரியை உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 36) என்பவர் ஒட்டி சென்றார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்து லாரியை மறித்த 3 மர்மநபர்கள் தினேஷ்குமாரை கீழே இறக்கி அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் பணம்,செல்போன்,ஏ.டி.எம்.கார்டு முதலியவற்றை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த தினேஷ்குமார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் மர்ம நபர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News