உள்ளூர் செய்திகள்
கச்சிராயபாளையம் அருகே குளவி கடித்து விவசாயி பலி
- அலெக்சாண்டர் (வயது46) விவசாயி. நேற்று மாலை தன்னுடைய விவசாய நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்
- திடீரென அவரை கதண்டு குளவி கடித்ததில் அலெக்சாண்டர் நிலை குலைந்து போனார்.
கள்ளக்குறிச்சி:
கச்சிராயபாளையம் அருகே உள்ள கரடி சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது46) விவசாயி. நேற்று மாலை தன்னுடைய விவசாய நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அவரை கதண்டு குளவி கடித்ததில் அலெக்சாண்டர் நிலை குலைந்து போனார். உடனே அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து தகவலின் பெயரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன